பிள்ளைகளை தற்கொலை தாக்குதலுக்கு அனுப்பிய சந்தேகத்தில் கைது..

இம்ஸாத் அகமட் இப்ரஹீம் இஸானா எக்ஸ்போட் உரிமையாளர் கோடீஸ்வரர்.

இவருடைய இரண்டு மகன்கள் இம்ஸாத் அகமட் இப்ரஹீம் 31 வயது.. முன்னர் கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்.
அடுத்தவர் இல்காம் அகமட் இப்ரஹீம் 33 வயது இந்த இருவரும் தற்கொலை குண்டுதாரிகள்.

இவர்களை உசுப்பேற்றி அனுப்பியது தந்தையும், குடும்பத்தினரும் என்ற சந்தேகத்தில் கைது செய்திருப்பதாக போலீஸ் அதிகாரி ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இவர் கோடீஸ்வரர் மட்டுமல்ல அரசியல் செல்வாக்கும் கொண்டவர். இவர் வர்;தக அமைச்சர் சுஜீவா சுனசிங்காவுடன் 2016 ல் கைகுலுக்கிய 2016ம் ஆண்டு புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.

இதுவரை 70 பேர் கைதாகியுள்ளனர்.

அலைகள் 26.04.2019

Related posts