இலங்கை பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு..

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிறன்று ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என 9 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்கல் நடத்தப்பட்டது. இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டினர். 14 வெளிநாட்டவர்களை பற்றிய விவரம் தெரியவரவில்லை.

12 வெளிநாட்டினர் உள்பட 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கை போலீசார் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியானது. தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக கருதப்படும் இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க தொலைபேசி எண்களும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

Related posts