மஹிந்த தரப்பே ஜனாதிபதியின் முதுகில் குத்தினர்

வெறும் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி ஆட்சியை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து அதில் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இல்லாது மஹிந்த தரப்பினர் ஜனாதிபதியின் முதுகில் குத்தினார்கள். இந்த மனக் கசப்புகளுடன்தான் மீண்டும் பேச்சுவார்த்தையில் அமர்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதியை காப்பாற்றவே வரவு செலவு திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையான ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts