ஜனாதிபதி முறைமையை இரத்து பூரண ஒத்துழைப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கலென்பிதுனுவெவ பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க செய்வதற்கான பிரேரணையை தானே முதலில் எடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்முறை வரவு செலவு திட்டத்தில் வறுமையயை ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts