வவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வோகஷ்வெவ பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தலுக்காக தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான தங்கூசி வலைகளை வைத்திருந்த குற்றத்திற்காக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 75,000 பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபர்களை 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றி வளைப்பினை தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் வவுனியா,மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுடனும், மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ் பெக்டர் மனோஹராவின் நெறிப்படுத்தலில் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

Related posts