சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்

காதல் காட்சியில் கண்ணடித்து நடித்து பிரபலமான நடிகை பிரியா வாரியரின் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் ஒரு வருட தாமதத்துக்கு பிறகு ஒருவழியாக சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் பிரியா ரசிகர்களுக்கும், தனக்கு ஆதரவு தெரிவித்த நெட்டிஸன்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சையாக இருக்கும் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பது பற்றிய கேள்விக்கு மனதில் பட்டதை மறைக்காமல் பேசி மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கி உள்ளார் பிரியா வாரியர்.

அவர் கூறும்போது, ‘இதில் அர்த்தம் எதுவும் இல்லை.

அந்த பிரச்னைபற்றி பெரிதாக நான் எடுக்கமாட்டேன். சம உரிமைக்கு போராட விரும்பினால், அதற்கு நாம் மிகவும் பின்னோக்கி செல்ல வேண்டும், சபரிமலையில் முன்னுரிமை என்ன என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அது பல்லாண்டுகளாக நடைமுறையிலும் உள்ளது. ஒரு பக்தர் 41 நாட்கள் விரதம் இருக்கிறார், அதேசமயம் பெண்களால் அதை மேற்கொள்ள முடியாது.

பெண்களால் 41 நாட்கள் சுத்தமாகவே இருக்க முடியாது என்பதுதான் இந்த விஷயத்தில் தடையாக உள்ளது’ என்றார்.

Related posts