கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்?

தெலுங்கில் மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்), தமிழில் சர்கார் படங்களுக்குப் பிறகு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இருபதுக்கும் மேற்பட்ட கதைகள் கேட்டும் அவருக்கு பிடித்த மாதிரியான சப்ஜெக்ட் எதுவும் அமையவில்லை என்பதால் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் நடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்.

தெலுங்கு இயக்குநர் நரேந்திரநாத் சொன்ன ஒரு கதை, அவரை மறுக்க முடியாத அளவுக்கு இம்பிரஸ் செய்துவிட்டதாம். ஹீரோயின் ஓரியண்டடான இந்தக் கதையில் நடிக்க உடனே கீர்த்தி சம்மதித்திருக்கிறார்.

தான் நடிக்க அவர் ஒரே ஒரு நிபந்தனை மட்டும்தான் விதித்தாராம். “இந்தப் படத்தை மகாநடி மாதிரி தெலுங்கு, தமிழ் இருமொழிகளிலும் வெளியிட வேண்டும்.

தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொள்ள, உடனே மேக்கப் போட்டுக் கொண்டு ஷூட்டிங்குக்கு கிளம்பிவிட்டார் கீர்த்தி. படத்தில் ஹீரோ என்று யாரும் சொல்லிக்கொள்ளும்படி இருக்க மாட்டார்களாம். அனேகமாக ஆக்‌ஷன் சப்ஜெக்ட்டாக இருக்கலாம் என்கிறார்கள்.

Related posts