ஐஸ்வர்யாவுக்கு 2 முறை காதல் தோல்வி

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் கனா படம் திரைக்கு வந்தது. கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதல் மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: காதல் விஷயத்தில் எனக்கு அதிர்ஷ்டமில்லை. பிளஸ் 2 படிக்கும்போது எனக்கு முதன் முறையாக காதல் முறிவு ஏற்பட்டது.

நான் காதலித்த பையன் என் தோழியுடன் சென்றுவிட்டான். என் தோழியும் அவனும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார்கள். பல ஆண்டுகள் கழித்தே மீண்டும் காதலித்தேன். ஆனால் நாங்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. காதல் செய்தால் அது காலம் எல்லாம் நிலைக்க வேண்டும் என்று நினைப்பேன்.

ஒருசிலர் பல காலம் காதலித்துவிட்டு பிரேக் அப் ஆன உடனேயே வேறு ஒருவரை காதலிக்கிறார்கள். எப்படித்தான் அவர்களால் அப்படி உடனே மனம் மாற முடிகிறதோ? பிரேக் அப் ஏற்பட்டால் அந்த மனநிலையிலிருந்து வெளியில் வர குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஆகும். என்னை பொறுத்தவரை தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

Tags:

Related posts