அமெரிக்கர்களை போல ஐரோப்பியர்களையும் நம்ப வேண்டாம்

அமெரிக்கர்களை போல ஐரோப்பியர்களையும் நம்ப வேண்டாம் என்று ஈரான் மூத்த மத தலைவர் காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி அந்நாட்டில் நடந்த அரசு விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது. ‘‘அமெரிக்காவுக்கு மரணம்தான் அதாவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாதுகாப்பு அமைச்சர் மைக் பாப்பியோ, பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை போன்ற அதிகாரமிக்கவர்களை குறிக்கிறது. அமெரிக்கர்களை போல் நாம் ஐரோப்பியர்களையும் நம்பக் கூடாது. நாங்கள் அவர்கள் தொடர்புக் கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. இருப்பினும் அவர்களிடம் நம்பகத்தன்மை இல்லை” என்றார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts