தொழிலை விட்டுவிட்டு கஜானாவை சுரண்டுபவன் நானல்ல : கமல்

அரசியலில் யாரும் சேவை செய்ய வேண்டாம்; தேவையான சம்பளம் தரப்படுகிறது; அதற்கு மேல் எடுத்தால் திருட்டு என்று சென்னை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்; மற்றவர்களைப் போல் தொழிலை விட்டுவிட்டு கஜானாவை சுரண்டுபவன் நானல்ல; நான் சம்பாதிப்பதில் எனக்கு போக மற்றவர்களுக்கும் கொடுப்பேன் என்று கூறினார்.

தமிழன் என்பது தகுதி அல்ல விலாசம்; எங்கிருந்து வந்து தமிழகத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்தாலும் அவர்கள் தமிழரே; இந்நேரத்தில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்; நாங்கள் சிறந்தவர்களாக இருக்க கடமையைச் செய்வோம் என்று கூறிய அவர், நல்ல கரங்கள் வரும்போது கை கொடுக்க வேண்டும்; நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று தெரிவித்தார். மேலும் அரசியலில் நல்லவர்கள் மட்டும் இருந்திருந்தால், தான் நிச்சயம் அரசியலுக்கு வந்திருக்க போவதில்லை என்று கூறிய அவர் உங்கள் பிள்ளைகள் வாழப்போகும் தமிழகம் இது, தமிழகத்திற்கு கைகொடுத்து தூக்கிவிடுங்கள் என்று கூறினார்.

Related posts