பொங்கல் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

இந்தப் பொங்கல் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மன நிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதை அறிந்த ரஜினி வீட்டுக்கு வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து பொங்கல் வாழ்த்துகளைக் கூறினார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ”அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டும், பொங்கல் பண்டிகையும் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மன நிம்மதியையும் அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

‘பேட்ட’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றார் ரஜினி.

Related posts