அரச வேடத்தில் சூர்யா படத்தை இயக்குகிறார் சசிகுமார்.

இப்போது விலை கூடிய அரச படங்களில் நடிப்பதில் முக்கிய நடிகர்கள் ஆசை கொள்கிறார்கள். காரணம் பாகுபலி 2 பெற்ற வெற்றியாகும்.

அரச படத்தில் தோன்றுவதானால் அதற்கான உடல்வாகு மிக அவசியம். அந்தவகையில் சிங்கம் சூர்யா தனது உடலை பேணி வருகிறார். கட்டையாக இருந்தாலும் அவருக்கும் இந்த ஆசை இருப்பது அதிசயமல்ல.

இந்த நிலையில் பிழைக்க எது வழியென யோசித்த சசிகுமாருடைய வரண்ட மண்டையில் திடீரென ஒரு யோசனை தோன்றியது.

இவனுகளை உசுப்பேற்றி அரச படம் என்று புறப்பட்டால் நல்ல எமவுண்ட் பார்க்கலாம் என்பதை கண்டு கொண்டார் அவர் தன் குரு பாலாவின் பாணியில் சிந்தித்தார்.

இதற்காக விஜய்யிடம் போயுள்ளார் அவர் மறுத்துவிட்டார். மறுக்காமல் என்ன செய்வார் ஏற்கெனவே சிம்புதேவனிடம் மாட்டுப்பட்டு புலி வேடம் போட்டு குப்புற விழுந்தவர். மறுபடியும் வேண்டாமப்பா என்று விரட்டிவிட்டாராம்.

சளைக்காத சசிகுமார் அப்படியே சூர்யா வீடு போயிருக்கிறார். கதை கேட்டு அவர் மயங்கிவிட்டார் இதனால் சசிகுமாருக்கு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அவருக்கு கதை விளங்கினால் ஏன் இப்படியிருக்கிறார் என்பது சசிக்கு தெரியாதா என்ன..?

ஏற்கெனவே சசிகுமாருக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என்பதை சூர்யா புரியவில்லை. சூர்யாவுக்கு நல்ல கதை விளங்காது என்பது கௌதம் மேனன் சொன்ன கருத்து. ஆகவே இரண்டு பேரும் களமிறங்கி தயாரிப்பாளரை படுக்க வைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

வடிவேல் வேறு இம்சையரசன் 2ம் பாகத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் எல்லோரும் அரச வேடத்தில் வந்தால் 2019 தாங்காதப்பா.

Related posts