ன்னித்தன்மை சான்றிதழ் அனுப்பிய ஹீரோயின்

நடிகை ராக்கி சாவந்த் தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தார். பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்றவர், சமீபகாலமாக சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா மீது ராக்கி சாவந்த் பாலியல் புகார் அளித்தார். தன்னை அவர் தவறாக பயன்படுத்திக்கொண்டார். தனுஸ்ரீ ஒரு லெஸ்பியன் என கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அவர் மீது தனுஸ்ரீ மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். கடந்த வாரம் பெண் பயில்வான் ஒருவர் முன் அவரை கிண்டல் செய்து நடனம் ஆடி முகத்தை பெயர்த்துக் கொண்டார் ராக்கி சாவந்த்.

மயங்கி விழுந்த ராக்கிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சில தினங்களுக்கு முன் திடீரென்று தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார் ராக்கி. தற்போது தனது வருங்கால கணவர் தீபக்கிற்கு தன்னுடைய கன்னித்தன்மைக்கான சான்றிதழ் அனுப்பி திணறடித்திருக்கிறார். ராக்கியின் கன்னித்தன்மை சான்றிதழை தனது இணைய தள பக்கத்தில் தீபக் வெளியிட்டிருப்பதுடன், ‘என்னை மிகவும் பெருமைப்படுத்திவிட்டாய் ராக்கி, நீ பரிசுத்தமானவள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Related posts