ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்லவில்லை குஷ்பு

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்லவில்லை என கோவையில் குஷ்பு பேசினார்.

கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் இந்திய கலாசார நட்புறவு கழகத்தின் 22வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பு பேச்சாளரான குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்பொழுது, காந்தி, நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் மதம், இனம் பார்க்காமல் வளர்ச்சியை தந்தனர்.

பள்ளி, கல்லூரிகளில் சாதி, மதம் பார்க்காமல் பழகிய காலம் நன்றாக இருந்தது. ஆனால் இன்று மதத்தின் பேரில் நடக்கும் பிரிவினை மனதிற்கு வேதனை அளிக்கிறது என கூறினார்.

அவர் தொடர்ந்து, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்லவில்லை. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு நன்றி.

நேரம் வரும்போது யார் பிரதமர் வேட்பாளர் என முடிவு செய்வோம் என்றும் அவர் கூறினார்.

Related posts