பிளாஸ்டிக் தடை…. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை

பிளாஸ்டிக்கை தடை செய்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து கடந்த ஜூன் 25ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிளாஸ்டிக் மேலாண்மை சட்ட விதிகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதற்கோ, ஒழுங்குமுறைபடுத்துவதற்கோ மத்திய அரசுக்கு தான் உரிமை உள்ளது.

தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Related posts