மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அதனடிப்படையில் 5 ஆவது முறையாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பாராளுமன்ற கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் தேசிய சிக்கல்கள் இருந்த காலத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தன்னை பிரதமராக நியமித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, குறித்த கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் பிரதமராக இருந்த காலத்தில் அனைத்து மக்களுக்கும் தன்னால் முடிந்தளவு சேவை செய்ததாகவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனசாட்சிக்கு அமைய பிரதமர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கடந்த ஒன்றரை மாதங்களாக தனக்கு பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை மேலே காணலாம்

Related posts