செல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா, பார்வதி, டாப்சி, றஞ்சித், டோனி

இந்தியாவில் 40 வயதுக்கு உட்பட்ட மக்களின் மனதில் இடம் பிடித்து செல்வாக்காக இருக்கும் 50 பேர்களுடைய பட்டியலை ஜிக்யூ என்ற பத்திரிகை வெளியிட்டிருந்தது.

அதில் நயன்தாராவும், பார்வதியும், டாப்சியும் இடம்பிடித்துள்ளனர்.

நயன்தாராவுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக வர்த்தகம் அவருடைய படங்களுக்கு இருக்கிறது.

அவர் வாங்கும் சம்பளமும் கதாநாயகர்களுக்கு நிகரானது இதனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மலையாளத்தில் உள்ள சூப்பர் ஸ்டார்களை கூட துணிந்து எதிர்த்து வென்றவர் பார்வதி. பெண்கள் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் துணிச்சலான நடிகை என்பதனால் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் அதனால் அவர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

ஆணாதிக்கம் நிறைந்த இந்தி சினிமாவில் துணிச்சலுடன் ஒவ்வொரு கதைகளை தேர்வு செய்து நடித்து இருக்கின்றார் டாப்சி.

இயக்குனர் ரஞ்சித், பாலிவுட் நடிகை ஆலியா, கிரிக்கெட் கேப்டன் டோனியும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்

Related posts