மதுரையில் பிளாஸ்டிக் தடை இன்று முதல் அமல்

மதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிளாஸ்டிக்கால் ஆன கேரி பேக்குகள், கப்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்துள்ளது. 50 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க, வைத்திருக்க மற்றும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகம் என்பதை உருவாக்க, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமையன்று தொடங்கி வைத்தார். இந்தப் பிரசார வாகனம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

Related posts