அகில இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம் பெறவுள்ள தமிழ் வீரர்கள் யார்..?

அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப செயலாளர் திரு. அருளானந்தசோதி உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலை தாயகத்தின் உதைபந்தாட்ட வீரர்களுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் வழங்கி ஆட்டங்களை ஆரம்பித்து வைத்தார். வல்வை எப்.சி. இணைப்பாளரும், விளையாட்டுத்துறை அதிகாரியுமான ஜிவிந்தன் நூல் வழங்கும் ஏற்பாடுகளை ரியூப் தமிழுடன் இணைந்து மேற்கொள்ள களை கட்டியிருக்கிறது வடக்கின் உதைபந்தாட்டம். இனி விபரமாக… அகில இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம் பெறப்போகும் தமிழ் வீரர்கள் யார்.. எத்தனை பேருக்கு வாய்ப்புக்கள் உள்ளன..? இன்று வடக்கே ஒளிரும் பரபரப்பான கேள்வி இதுதான். பலர் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக தெரிகின்றன என்கிறார்கள் பயிற்சியாளர்கள். இலங்கை அணிக்கு பருத்தித்துறை லீக்கில் இருந்து வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகள் இன்றிலிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டிகள் இன்று காலை…