கணவன்; முகத்தில் வெந்நீரை ஊற்றிய மனைவி

குடிபோதையில் மனைவியை கருப்பாக இருக்கிறாய் அழகாக இல்லை என கிண்டல் செய்த கணவன் முகத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றினார் மனைவி.

குடித்துவிட்டு தொல்லை கொடுத்ததோடு, நீ அழகாக இல்லை,கருப்பாக இருக்கிறாய்,எனவே நான் வேறு திருமணம் செய்யப்போகிறேன் என்று கூறிய கணவன் முகத்தில் வெந்நீரை ஊற்றிய மனைவி.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் சியாம்வெஸ்லி (36). இவர் மனைவி கிறிஸ்டி (34). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. சியாம்வெஸ்லிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர் மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் சாதாரணமாக சண்டையிட்டு வம்பிழுத்து வந்த கணவன் வெஸ்லி சமீப காலமாக மனைவியின் அழகை குறிப்பிட்டு திட்ட துவங்கியுள்ளார். திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து தற்போது மனைவியை அழகாக இல்லை, கருப்பாக இருக்கிறாய் என்று இழிவாக பேசிவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

நேற்றும் வழக்கம் போல் மது போதையில் அழகுப்பற்றி பேசி வம்பிழுக்க ஆத்திரமடைந்த மனைவி கிறிஸ்டி கொதிக்க கொதிக்க சுடுதண்ணீரை எடுத்து வந்து கணவன் சியாம் வெஸ்லி முகத்தில் ஊற்றியுள்ளார். இதனால் முகம் வெந்து சியாம்வெஸ்லி அலறி துடித்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறி துடித்த சியாம் வெஸ்லியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்தனர். இந்த விவகாரம் குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts