கரு ஜயசூரியவின் பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 10 இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

வலப்பனை தேர்தல் பிரதேசமான நுவரெலியா, இராகலை நகரில் நேற்று (25) இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மைக்கும் தீ மூட்டப்பட்டது.

அமைச்சர் சி.பீ. ரத்னாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராகலை நகர பௌத்த ஆலயத்துக்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக இராகலை மேல் நகர தொகுதி சந்தியில் ஒன்று கூடினர்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து பாராளுமன்ற தேர்தலை நடத்தும்படி வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பதாதைகளையும் ஏந்தி வந்தனர்.

இதனை அடுத்து மேடை அமைக்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்தவர்கள் அங்கு அமைச்சர் சி.பீ. ரத்னாயக்காவின் உரையை தொடர்ந்து தேர்தலை வலியுறுத்திய மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது பேரணியில் ஏந்தி வந்த பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மைக்கு தீ மூட்டியமை குறிப்பிடத்தக்கது.

————–

பாணந்துறை நகரில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ மேலும் மூன்று கடைகளுக்கு பரவியதில் குறித்த கடைகள் நான்கும் எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்று (25) இரவு பாணந்துறை நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் ஏற்பட்ட திடீர் தீ, அருகிலுள்ள மேலும் இரு கடைகளுக்கு பரவி தீப்பிடித்து எரிவதாக பாணந்துறை தெற்கு பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைய குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

————–

ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

————–

மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகி பட்டம் எடுப்பதைவிட மக்களுக்காகப் பணியாற்றி துரோகி பட்டம் சூடிக்கொள்வதை மேலானதாக நினைப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் அபிவிருத்தி பிரதியமைச்சரும் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் (24) தெரிவித்தார்.

————–

கண்டி தலதா மாளிகைக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதமருடன் முன்னாள் பிரதி அமைச்சர் ஆனந்த அலுத்கமகே மற்றும் லொஹான் ரத்வத்தை ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.

————–

போலீஸ் நிலையம் அழைத்து கேக் உள்ளிட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரை விடுவித்துள்ளனர்.

Related posts