மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை

யாழில் இடம்பெறவுள்ள மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில்,மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும்,

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts