வங்கி கணக்குக்கு நிதியுதவி அனுப்பிய விஜய்

நடிகர் விஜய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயல் கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ளது. அங்கு உணவு, தண்ணீர், மின்சாரம், வீடு என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குப் பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண உதவியாக வழங்கியுள்ளார். அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண பொருள்களாகவும் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Related posts