தொல் திருமாவளவன் இலங்கையில் பஞ்ச் டயலக்..?

ஒரு மனிதன் எப்போது பஞ்ச் டயலக் பேசுகிறான்..? மக்களுக்கு சொல்வதற்கு உருப்படியாக எதுவும் இல்லாத போது பஞ்ச் டயலக்கை எடுத்து வீசுகிறான்.

நான் ஒரு முறை சென்னா நூறு முறை சொன்னமாதிரி என்று ரஜினி விட்ட பஞ்ச் டயலக் இன்று கேலிப் பேச்சுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மு.கருணாநிதியும், அண்ணாத்துரையும் பேசிய அரசியலும் சரக்கில்லாத பஞ்ச் டயலாக்குகளே என்பதை காலம் தெளிவாக காட்டிவிட்டது.

பானுமதி படிதாண்டா பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல என்ற அண்ணாவின் பஞ்ச் டயலாக்கை இன்று கவிஞர் வைரமுத்து பேசினால் என்ன நடக்கும்..?

ஆகவேதான் சரக்கு இல்லாத போது பஞ்ச் டயலாக்கால் மக்களை ஏமாற்றுகிறார்கள். இதற்கு தொல். திருமாவளவனும் புறநடையல்ல என்பதற்கு ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும் என்ற அவருடைய பஞ்ச் டயலாக்கே உணர்த்துகிறது.

ஓர் உருப்படியான தேடல், தெளிவு எதுவும் இல்லாமல் இப்படியே வண்டியோட்டி என்ன பயன் தொல் திருமா..?

ஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சென்றுள்ள தொல்.திருமாவளவன், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் கெ.வி.விக்னேஸ்வரனை சந்தித்தார்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “ஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும் என்கிற முழக்கத்தை முன்வைத்து, ஈழம் ஒன்றே தீர்வு என்கிற கருத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருக்கிறது.

இன்றைக்கு அது பொருந்துவதாக இல்லாமல் இருக்கலாம். அதனை பேசுவது சரியானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைபாட்டை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு ஈழம் தான்” என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related posts