கத்திக்குத்து கரேஜ்ஜில் கிடந்தது சடலம் சந்தேக நபர் கைது

டென்மார்க்கில் வார விடுமுறை வந்தால் யாருக்கு கத்திக்குத்து விழுந்தது என்று கவலைப்படுமளவுக்கு கத்திக்குத்து கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

நேற்று ஞாயிறு அதிகாலை கத்தியால் குத்திய சந்தேகத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க்கில் உள்ள கல்ஸ்சுண்ட் என்ற இடத்தில் உள்ள நோரகேத பகுதியில் இருந்த கராஜ் ஒன்றில் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்த பெண்மணி ஒருவருடைய சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இந்த நபர் கைதானார்..

இவர் யார்..? இறந்த பெண்மணியின் அடையாளம் என்ன..? அவருக்கும் கைதான இவருக்கும் உள்ள தொடர்பென்ன..? விபரம் தர மறுத்துவிட்டது போலீஸ்.

விசாரணைகள் நடக்கின்றன.

அலைகள் 12.11.2018

Related posts