உலகைச் சுற்றிவரப்போகும் டைட்டானிக்- 2

டைட்டானிக்-2 கப்பல் தனது பயணத்தை எப்போது தொடங்கும் என்று உலகமெங்கும் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், 2022-ல் அந்தப் பிரம்மாண்ட கப்பல் இயங்கத் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறது ஆஸ்திரேலிய நிறுவனமான ப்ளூ ஸ்டார் லைன்.

1912-ல் இரண்டாயிரம் பயணிகளோடு சவுத்தாம்ப்டனிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியே நியூயார்க் செல்லும் வழியில் பனிப்பாறைகளில் மோதி மூழ்கியது டைட்டானிக். பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே வடிவத்தில் அந்தக் கப்பலைக் கட்டும் முயற்சியில் இறங்கியது ப்ளூ ஸ்டார் லைன். ஒன்பது அடுக்குகள், 835 கேபின்களோடு 2,435 பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இந்தக் கப்பல் தயாராகிவருகிறது. முதல் பயணம்: சவுத்தாம்ப்டன் டு நியூயார்க் தான்!

டைட்டானிக்-1-க்கு ஏற்பட்ட கதியைத் தவிர்க்கும் வகையில், ரேடார் உள்ளிட்ட சகலவிதமான நவீன வசதிகளோடு அதிகளவில் உயிர் காக்கும் படகுகளும் இணைக்கப்பட்டுள்ளன!

Related posts