2.0 திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 2.0 திரைப்படத்தின் டிரைலர் இணையத்தளம் மற்றும் திரையரங்குகளில் வெளியாகியது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டது. 2.0 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அக்ஷய் குமார் இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் ரஜினிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்சய் குமார், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை எமி ஜாக்சன் பங்கேற்று உள்ளனர்.

விழாவில் ஏ.ஆர் ரஹ்மான் பேசியதாவது;-

அதிக கஷ்டங்களை எதிர்கொண்டு வென்ற ரஜினியை மிகவும் பிடிக்கும். 40 வயதில் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன்.
இந்த ஒரு படத்தில் பணியாற்றியது, 8 படத்தில் பணியாற்றியதற்கு சமம் என கூறினார்.

ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் உடன் 2.0 படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி, உங்கள் அன்பிற்கு நன்றி. 2..0 படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது என நடிகர் அக்ஷய் குமார் பேசினார்.

நிகழ்ச்சியில் ஷங்கர் பேசியதாவது;-

நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்க வாய்ப்பு உள்ளது. 2.0 திரைப்படம், ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என கூறினார்.

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 2.0 திரைப்படத்தின் டிரெய்லர் இணையத்தளம் மற்றும் திரையரங்குகளில் வெளியாகியது.

Related posts