வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் – நடிகர் சிவக்குமார்

செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டி விட்டதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் சிவக்குமார்.

மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தை நடிகர் சிவகுமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். ரிப்பன் கட் பண்ணுவதற்கு சிவகுமார் அருகில் வரும்போது, ஓரமாக நின்ற ரசிகர் ஒருவர் தனது செல்போனை உயர்த்தி செல்பி எடுக்கும் ஆவலில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத நேரத்தில் சிவகுமார் திடீரென செல்பி எடுக்கும் இளைஞர் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார். அந்த இளைஞர் கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ பதிவு பெரும் வைரலாகப் பரவியது. இதை வைத்து மீம்ஸ் எல்லாம் உருவாக்கி வெளியிட்டார்கள். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இளைஞர் செல்போனைத் தட்டி விட்டது ஏன் என்று சிவகுமார் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் செல்போனை தட்டி விட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து சிவகுமார் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts