சர்கார் கதை திருடப்படவில்லை வேலிக்கு ஓணான் சாட்சி

சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது; அது திருடப்பட்டது என்பது சரியல்ல என எழுத்தாளர் ஜெயமோகன் கூறி உள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்த நிலையில் சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது. அது திருடப்பட்டது என்பது சரியல்ல என எழுத்தாளர் ஜெயமோகன் கூறி உள்ளார்.

சேலம் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்க வந்த எழுத்தாளர் ஜெயமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:

சர்கார் திரைப்படத்தின் கதை ஒரு பொதுவான கருவை கொண்டது. தேர்தலின்போது நடிகர் சிவாஜியின் ஓட்டை ஒருவர் போட்டு விடுகிறார். நாடு முழுவதும் அறியப்பட்ட ஒரு பிரபலத்தின் ஓட்டை வேறொருவர் போட்டு விடுகிறார். இது எல்லோரும் அறிந்தது. இதுபொதுவான கரு. இந்த கருவை வைத்து எல்லோருமே கதை எழுதலாம். அதற்காக எல்லா கதைகளும் ஒன்றாகிவிடாது. சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது. அது திருடப்பட்டது என்பது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts