ராஜபக்சேவுக்கு சீன அதிபர் வாழ்த்து

இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமர் ஆகி உள்ளார்.

அவருக்கு உலக தலைவர்கள் யாரும் வாழ்த்து தெரிவிக்காத நிலையில் முதன் முதலாக சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது சார்பில் இலங்கைக்கான சீன தூதர் செங் சூயுவான், இன்று ராஜபக்சேயை நேரில் சந்தித்து சீன அதிபர் ஜின்பிங்கின் வாழ்த்துச்செய்தியை தெரிவித்தார்.

இந்த சந்திப்பை படத்துடன் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சீனாவுக்கு ராஜபக்சே நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Related posts