வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று

முதலாவது வடக்கு மாகாண சபையின் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையில் சபையின் இறுதி அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்றது.

யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள மாகாண சபை செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ. வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இவ் அமர்வு நடைபெறவுள்ளது.

கடந்த 25.10.2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சபையின் ஐந்தாண்டு காலத்தின் இறுதி அமர்வு இன்று நடைபெற இருக்கின்றது.

இச் சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தற்போது ஐந்தாண்டு வரையான காலத்திற்குள் 134 அமர்வுகள் நடாத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சபையின் இறுதி அமர்வான இன்றைய தினமே சபையில் முதலாவது விடயமாக சபைக்கான கீதம் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட இருக்கின்றது.

இதற்கு அடுத்ததாக பொதுவாக முதலமைச்சர் உட்பட உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்கப்படும். அதற்கமைய போதுமானவரை நேர கட்டுப்பாட்டோடு அனைவரதும் செயற்பாடுகள் அங்கீகரிக்கப்படும்.

சபையில் உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளுக்கு பெரியளவில் இடம் இல்லாவிட்டாலும் சில விளக்கங்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

அந்தச் சந்தரப்பங்களில் அவர்கள் தங்களது சுருக்கமான விளக்கங்களை வழங்கி வைத்து முடித்துக் கொள்ள வேண்டுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts