அமலாபால் தொடங்கும் புதுபிஸ்னஸ்

ஹீரோக்களுடன் டூயட் பாடும் நாயகியாக வலம் வந்துக்கொண்டிருந்த அமலாபால் சமீபகாலமாக மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கிறார். ‘ஆடை’ படத்தில் முக்கால் நிர்வாணமாக நடித்திருக்கிறார்.

இந்த புகைப்படம் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இனிவரும் படங்களிலும் முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடிக்கவே விரும்புவதாகவும் எதிர்காலத்தில் அரசியலில் குதிக்கும் எண்ணமும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகளை நேரில் சென்று வழங்கினார்.

அப்போது பல பெண்கள் அவரிடம் உதவி கேட்டனர். இதையடுத்து சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு புதிய பிஸ்னஸ் தொடங்கி அதில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி முடிவு செய்திருக்கிறார்.

இயற்கை முறையிலான சத்துள்ள உணவு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க எண்ணி உள்ளார்.

இதில் போட்டியாளர்கள் குறைவு என்பதால் தன்னால் வெற்றிகரமாக இந்த பிஸ்னஸை நடத்த முடியும் என்கிறார் அமலாபால்.

இந்தநிலையில் நடிகை அமலாபால் Metoo குறித்து கூறுகையில்,

சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் Metoo மிக முக்கியமானது. எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன், அதைப்போல் எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும் எனக்கூறியுள்ளார்.

பிரபலங்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் அமலாபால் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts