பிரதமர் ரணில் விக்ரசிங்க நோர்வே நோக்கி பயணமானார்

பிரதமர் ரணில் விக்ரசிங்க நோர்வே மற்றும் இங்கிலாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணமாகியுள்ளார்.

பிரதமருடன் 14 பேர் கொண்ட தூதுக் குழுவினரும் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவினர் இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 349 என்ற விமானத்தின் ஊடாக பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts