தர்மா தர்மகுல சிங்கம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை

tharma-1

டென்மார்க் வாழ். தர்மா தர்மகுலசிங்கம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக பல செய்திகள் வெளியிடப்பட்டு வந்துள்ளன. இவை ஆதரமற்ற செய்திகள், பொய்யானவை என்று கூறும் தர்மா இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு..:

தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கும் தர்மா தர்மகுலசிங்கம் ஆகிய நான், யாழ்ப்பாணம், கரவெட்டி. கன்பொல்லைக் கிராமத்தில், உள்ள புத்த மகாசங்கத்திற்குச் சொந்தமான காணியில், புத்த விகாரை ஒன்றைக் கட்ட முனைந்துள்ளதாக விஷமிகளால் பொய்யான பிரச்சாரம் ஒன்று ஊடகங்களூடாகப் பரப்பப் படுகின்றது .

இச் செய்தியில் எந்த உண்மையும் கிடையாது .

இது எனது பெயரை களங்கப் படுத்துவதற்கான வதந்தியாகும் .

இதை உங்கள் பொது ஊடகத்தில் வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் .

Related posts

Leave a Comment